ராயபுரத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7,881ஆக உயர்வு.!

Default Image

ராயபுரத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 7,881ஆக உயர்வு.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த வகையில் நேற்று மட்டும் சென்னையில் ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 55,969 ஆக உயர்ந்தது, மேலும் சென்னையில் இதுவரை 33,441 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மேலும், 21,681 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.சென்னையில் 846 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 7,881பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ராயபுரத்தில் அதிகமானோருக்கு தொற்று உறுதியானாலும் அங்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 2,212 ஆக உள்ளது.

மேலும்  அண்ணாநகரில் மொத்த பாதிப்பு 6,033 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் தண்டையார்பேட்டை -6,539 பேர், தேனாம்பேட்டை- 6,095பேர், கோடம்பாக்கம்- 5,827 பேர்,  திருவிக நகர்- 4,666 பேர், வளசரவாக்கம்- 2,611பேர், திருவொற்றியூர்-2,520 பேர், அம்பத்தூர் -2324 பேர், அடையாறு – 3,445 பேர், மாதவரம்- 1,819பேர், பெருங்குடி-1,290 பேர், சோழிங்கநல்லூர்- 1,634பேர், ஆலந்தூர்-1,431 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்