என்பிஆர் கணக்கெடுக்கும் பணி துவங்க வேண்டும் என பல மாநிலங்களில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இதையெடுத்து தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புவருகின்ற ஏப்ரல் 01-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் 2002 -ம் ஆண்டு எடுக்கப்பட்ட என்.பி.ஆர் விட 2020-ல் எடுக்கப்படும் கணக்கெடுப்பில் 3 அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 3 அம்சங்கள் தான் சிறுபான்மையின மக்கள் மத்தியில் அச்சம் ஏற்படுத்தியுள்ளது.அந்த மூன்று கேள்விகள் குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது.
இதையெடுத்து நேற்று அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு போது , தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு மத்திய அரசு இன்னும் பதில் அளிக்காத நிலையில் தமிழகத்தில் என்பிஆர் நடைமுறை நிறுத்தி வைக்கப்படுவதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று சட்டபேரவையில் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்) பணிகள் நிறுத்திவைக்கப்பட்டதை சட்டப்பேரவையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார் என்பிஆர் நிறுத்திவைப்பு என்பது புதிய அறிவிப்பு இல்லை; பேரவையில் கூறியதையே செய்தியாளர் சந்திப்பிலும் தெரிவித்தேன். இதில் உரிமை மீறல் எதுவும் இல்லை என கூறினார்.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…