மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்.19 ஆம் தேதி நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து,தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் பிப்.22 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
அதன்படி,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றது.ஆனால், மக்கள் நீதி மய்யம்,அமமுக,நாம் தமிழர் உள்ளிட்ட சில கட்சிகள் பெரும்பாலான இடங்களில் தோல்வியையே தழுவியது.
இந்நிலையில்,மக்கள் நீதி மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று மாலை ஜூம் செயலி வாயிலாக உரையாற்றுகிறார்.
இது தொடர்பாக,மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் இளங்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நம்மவரின் நம்பிக்கையாளர்களுக்கு வணக்கம்.நம் தலைவர் அவர்கள் 26-02-2022 மாலை 06.00 மணிக்கு ஜூம் செயலி வாயிலாக தேர்தல்,தேர்தல் முடிவுகள் மற்றும் மய்யத்தின் அடுத்தக்கட்ட செயல்திட்டங்கள் குறித்து நம் மத்தியில் உரையாற்ற இருக்கிறார்.
இக்கூட்டத்தில் வேட்பாளர்கள்,தேர்தல் பொறுப்பாளர்கள்,மாநில, மண்டல,மாவட்டச் செயலாளர்கள்,மண்டல,மாவட்ட அமைப்பாளர்கள், பொருளாளர்கள்,அனைத்து பிற பொறுப்பாளர்கள் அனைவரும் அவசியம் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜூம் இணைப்பு கூட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அறிவிக்கப்படும்,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : இன்றயை காலத்தில் யுபிஐ (UPI - Unified Payments Interface) பரிவர்த்தனை என்பது அதிகரித்துள்ள நிலையில், தொடர்ச்சியாக இதனை…
சென்னை : தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் பாபி சிம்ஹாவின் கார் இன்று விபத்துக்குள்ளாகி கார்…
சென்னை : துரை வைகோ, அவரது தந்தை வைகோ நிறுவித்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சியின் முதன்மை செயலாளர்…
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : திருச்சி எம்பி துரை வைகோ, தனது கட்சியின் முக்கிய தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார்.…
பெங்களூர் : இந்த சீசன் ஐபிஎல் தொடரில் பெங்களுர் அணி சிறப்பாக தங்களுடைய விளையாட்டை வெற்றிமூலம் ஆரம்பித்து இப்போது கொஞ்சம்…