வாக்குறுதி அளித்தபடி உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் – கனிமொழி!

Published by
Rebekal

மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில் தற்பொழுது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 40 இடங்களில் நடைபெறக்கூடிய இந்த அகழ்வுப் பணிகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட மண்பாண்டங்கள், கருவிகள் எலும்புக்கூடுகள் ஆகியவற்றையும் மீதமுள்ள பணிகள் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டுள்ளனர்.

அதன் பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கனிமொழி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணிகளை நானும் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அனிதா R. ராதாகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் பார்வையிட்டோம். மீதமுள்ள இடங்களில் அகழாய்வு நடத்தப்பட வேண்டும். முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,

Published by
Rebekal

Recent Posts

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

நவராத்திரி நான்காம் நாள்.! வீட்டில் செல்வம் பெருக மகாலட்சுமி தேவியை வழிபடும் முறை..!

சென்னை-நவராத்திரியின் நான்காவது நாள் பூஜை முறை ,நேரம் ,கடன் தீர மஹாலட்சுமியை வழிபடும் முறை பற்றி இந்த ஆன்மீக செய்தி…

22 mins ago

விறுவிறுப்பாக நடைபெறும் ஹரியானா சட்டமன்ற தேர்தல் … தற்போதய நிலவரம் என்ன?

ஹரியானா : இன்று காலை 7 மணிக்கு ஹரியானா மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கி…

34 mins ago

“பிக் பாஸ் போறேன் ஆதரவு கொடுங்க”..கெஞ்சும் குக் வித் கோமாளி பிரபலம் ஸ்ருத்திகா!!

சென்னை : சினிமா துறையில் இருக்கும் பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னதிரைக்கு வந்து கலக்கிக் கொண்டு இருப்பார்கள்.…

42 mins ago

குடை எடுத்துக்கோங்க.. அடுத்த 2 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களில் மழை பெய்யும்.!

சென்னை : ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

46 mins ago

தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் மறைவு.. நானி, ஜூனியர் என்டிஆர் அஞ்சலி.!

ஹைதராபாத் : பழம்பெரும் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தின் மகள் காயத்ரி(38) இன்று அதிகாலை காலமானார். காயத்ரிக்கு கணவர் மற்றும்…

59 mins ago

“மதமும், சாதியும் ஒரு மனிதனை வெறுக்கவைக்கும்”.. அஜித் பேசிய வைரல் வீடியோ.!

சென்னை : நடிகர் அஜித்குமார் அண்மையில், "வீனஸ் மோட்டார்சைக்கிள் டூர்” என்ற பைக் டூர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார். சென்னையை…

1 hour ago