மத்திய அரசு வாக்குறுதி அளித்தபடி உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கனிமொழி கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில் தற்பொழுது ஆய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 40 இடங்களில் நடைபெறக்கூடிய இந்த அகழ்வுப் பணிகள் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்தை நேரில் சென்று பார்வையிட்ட தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட மண்பாண்டங்கள், கருவிகள் எலும்புக்கூடுகள் ஆகியவற்றையும் மீதமுள்ள பணிகள் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டுள்ளனர்.
அதன் பின்பு தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கனிமொழி, ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்றுவரும் அகழ்வாராய்ச்சி பணிகளை நானும் பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அனிதா R. ராதாகிருஷ்ணன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் அர்ச்சுனன் ஆகியோர் பார்வையிட்டோம். மீதமுள்ள இடங்களில் அகழாய்வு நடத்தப்பட வேண்டும். முந்தைய ஆய்வு முடிவுகளை வெளியிட வேண்டும். வாக்குறுதி அளித்தபடி மத்திய அரசு உடனடியாக அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…