தமிழகத்தில் 17 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிய மருத்துவ கல்லூரிக்கு முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இதைதொடர்ந்து விருதுநகரில் அமைய உள்ள மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இந்நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார்.
அதில் விருதுநகரில் புதிய மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு தன்னை முறையாக அழைக்காமல் அவமதித்துவிட்டதாக அம்மாவட்ட எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இன்று மதியம் 12.35 மணிக்கு தான் அழைப்பிதழ் அனுப்பப் பட்டதாகவும் , கடந்த 2010 ஆண்டு முதல் குரல் கொடுத்துவந்த மருத்துவகல்லூரியின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முடியாததற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தனிடம் வருத்தம் தெரிவிக்கிறேன்.ஏனென்றால் மதுரையில் இருந்து 11.40 மணிக்கு டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டு விட்டேன் என கூறினார்.
எம்.பி ஆன தன்னை அவமதித்ததது தொடர்பாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் “மதியாதார் தலைவாசல் மிதியாதே ” என்றும் பதிவிட்டுள்ளார்.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…