நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள்.!

Published by
Ragi

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக உண்மையை கூறிய ரேவதி உட்பட நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாகவே முன் வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் காவலர் ரேவதி, ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை போலீசார் லத்தியால் விடிய விடிய அடித்தார்கள் என்றும், டேபிள் மற்றும் லத்தியில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும், நடந்ததை எங்கு வேண்டுமானாலும் சொல்லுவேன் என்றும் தைரியமாக நேற்று மதுரை நீதிமன்ற கிளையில் நடந்த விசாரணையில் கூறியுள்ளார். மேலும் மாஜிஸ்திரேட் பாரதிதாசன், மதுரை உயர்நீதிமன்றத்தினர் ஆகியோர் நீதியை நிலைநாட்ட போராடி வருகின்றனர். இதனால், இவர்களது உண்மைத் தன்மையை பாராட்டி பிரபலங்கள் உட்பட பலர் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, சாத்தான்குளம் இரட்டை கொலையில் நீதியை நிலைநாட்ட போராடி கொண்டிருக்கும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும், அவருக்கு உறுதுணையாக நிற்கும் மதுரை உயர்நீதிமன்றத்திற்கும் மனசாட்சியோடு சாட்சி சொன்ன காவலர் ரேவதிக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

அவரை தொடர்ந்து இயக்குனரான வெற்றி மாறன் கூறியதாவது, மாண்புமிகு நீதிபதிகளான பி. என். பிரகாஷ், பி. புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தைரியமான ரேவதி ஆகிய நீங்கள் அனைவரும் எங்களுக்கு நம்பிக்கையை தந்தீர்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இவர்கள் ட்வீட்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
Ragi

Recent Posts

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்! உலக நாட்டு தலைவர்கள் நேரில் மரியாதை!

வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…

8 minutes ago

“ஓட்டு மட்டுமே குறிக்கோள் இல்லை., மக்களோடு பேசுங்கள்!” விஜய் கொடுத்த ‘குட்டி’ அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…

39 minutes ago

ஈரான் துறைமுகத்தில் பயங்கர வெடி விபத்து! 300க்கும் மேற்பட்டோர் காயம்!

தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…

1 hour ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் சிறிய தீ விபத்து? “ஒதுங்கி நில்லுங்கள்!” விஜய் அட்வைஸ்!

கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…

2 hours ago

தவெக பூத் கமிட்டி கருத்தரங்கு.., என்ன பேசப்போகிறார் விஜய்?

கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…

3 hours ago

கட்டாய கடன் வசூல்., 3 ஆண்டுகள் சிறை! புதிய சட்ட மசோதா விவரங்கள் இதோ…

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…

5 hours ago