பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது என்று தங்க தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார்.
ஆண்டிப்பட்டி அமமுக ஒன்றிய அலுவலகத்தில் விடியவிடிய சோதனை நடைபெற்றது. வருமான வரிச்சோதனையில் 94 சிறு பாக்கெட்டுகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒவ்வொரு பாக்கெட்டிலும் வாக்காளரின் பெயர் மற்றும் 300 ரூபாய் பணம் என எழுதப்பட்டிருந்தது.சோதனையில் ரூ.1.50 கோடி பணம் சிக்கியது.அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தற்காக அமமுக மாவட்ட துணை செயலாளர் பழனி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் இது தொடர்பாக அமமுகவின் தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசுகையில், பணம் பறிமுதல் செய்யப்பட்ட வணிக வளாகம் அதிமுக பிரமுகருக்கு சொந்தமானது . எங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பணம் பறிமுதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை .வருமான வரித்துறை திட்டமிட்டு நாடகமாடுகிறது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…