மிசா விவகாரம் ! 2 நாளில் ஆதாரத்துடன் வருவேன் -அமைச்சர் பாண்டிராஜன்

Default Image

ஸ்டாலினுக்கு 2 நாட்களில் பதிலளிக்கப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் மிசா சட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது குறித்து  சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.அமைச்சரின் கருத்துக்கு எதிராக திமுகவினர் போராட்டம் மேற்கொண்டனர்.ஆனால் அதை தவிர்க்குமாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவோம் . ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் இல்லை என்பதால் சந்தேகம் எழுப்பினேன்.மிசா கைது விவகாரத்தில் ஸ்டாலின் கைதானாரா ? இல்லையா ? என்பதை இரண்டு நாட்களில் ஆதாரத்துடன் பதில் அளிப்பேன் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்