கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார்.
மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில், மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் கலந்து கொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் அதிமுக மகளிர் அணியினர் மற்றும் நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் இரவு உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அதிமுகவினர் வரிசையாக இந்த பிரியாணியை வாங்கி தரையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள் பாக்குமட்டை தட்டை வாங்கி, அதிமுக தொண்டர்களோடு வரிசையில் நின்று பிரியாணியை வாங்கி சாப்பிட்டார். மேலும் நின்றபடியே பிரியாணி சாப்பிட்ட அவர், பெண் தொண்டர்களிடம் சென்று நலம் விசாரித்ததோடு, பிரியாணி நன்றாக உள்ளதா? என்றும், நிறைய வாங்கி சாப்பிடுங்கள் என்றும் கூறியுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவின் இந்த செயல் அங்கு கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…