தமிழகம்,கர்நாடகம், புதுவை ஆகிய மாநிலங்களுக்கான காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம்,இன்று தலைநகர் தில்லியில், ‘காணொளி காட்சி’ வாயிலாக நடத்தப்படுகிறது.
தமிழகத்திற்கு காவிரி நீர் முறையாக கிடைப்பதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவினர், மாதந்தோறும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போது, டெல்டா மாவட்டங்களில், சம்பா பருவ சாகுபடி காலம் துவங்கியுள்ளதால் கர்நாடகாவில் இருந்து, காவிரி நீரை பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டம், இன்று டில்லியில், காணொளி காட்சி வாயிலாக நடக்கிறது. மத்திய நீர்வளஆணைய தலைமை பொறியாளரும், குழுவின் தலைவருமான நவீன் தலைமையில், இக்கூட்டம் நடக்கவுள்ளது. தமிழகம் தரப்பில், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியம், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி ஆகியோர் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…