ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும்…!அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர்
ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா கூறுகையில், ஜெயலலிதாவிற்கு 21 மருத்துவர்கள் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர்.ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும். மருத்துவக் குழுவால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும் .
அப்பலோ மருத்துவமனைக்கு எதிராக குற்றம் சாட்டப்படுகிறது, சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று அப்பலோ மருத்துவமனை வழக்கறிஞர் மஹிபுனா பாட்ஷா தெரிவித்துள்ளார்.