குளிக்கும் வீடியோவை எடுத்து மிரட்டிய நபர்.! ஆத்திரமடைந்த கணவர்.! அடுத்து நடந்த விபரீதம்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது.
  • பின்னர் போலீஸ் விசாரணையில், மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதால், எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலத்தில் தெரியவந்தது.

கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் போலீஸ் விசாரணையில், சடலமாக கிடந்தவர் கயத்தாறு அடுத்து கம்மாபட்டி வடக்கு தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி 35 வயதுடைய மில்டன் ராஜ் என்பதும், இவருக்கு திருமணமாகி ராணி என்ற மனைவியும், மிஷன் என்ற 3 வயது குழந்தை இருப்பதும் தெரியவந்தது. கடந்த 25-ம் தேதி கம்மாபட்டி அருகேயுள்ள கிருஸ்துவ ஆலய விழாவிற்கு செல்வதாக மில்டன் ராஜ் தனது வீட்டில் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை என்று தெரிய வருகிறது.

இதைத்தொடர்ந்து போலீஸ் விசாரணையில், அதே ஊரை சேர்ந்த விஜயன் என்ற கொத்தனார் கடைசியாக கால் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் விஜயனிடம் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். விஜயனுக்கு வெண்ணிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளன. இதனிடையே போலீசாரிடம் விஜயன் கொடுத்த வாக்குமூலத்தில், என்னுடைய மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டினார். அதனால் எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டு வீடியோ மற்றும் போட்டோக்களை அளித்துவிட்டேன் என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி! 

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

2 hours ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

6 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

6 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

6 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

7 hours ago