மதுபோதையில் மூதாட்டியை கொலை செய்த நபர் கைது..!

Default Image

மதுரை மாவட்டத்தில் 60 வயதான மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் சிலைமான் எல் கே டி நகரில் வசித்து வந்தவர் மூதாட்டி செல்லம்மாள் 60 வயதான இவர் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் இவரது உறவினர் டைட்டஸ் என்பவர் நடத்துனராக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார் .மேலும் டைட்டஷிற்கு கடந்த புதன் கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

இந்நிலையில் அந்த குழந்தையை பார்க்க வருமாறு மூதாட்டி செல்லமாளை டைட்டஸ் நேற்று அழைத்துள்ளார் ஆனால் மூதாட்டி செல்லம்மாள் வர மறுத்துள்ளார் , அப்போது இதனால் ஆத்திரமடைந்த டைட்டஸ் குடிபோதையில் இருந்த டைட்டஸ் மூதாட்டி செல்லம்மாள் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று செல்லம்மாளின் உடலை கைப்பற்றி அங்குள்ள ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை டைட்டஷிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்