வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது.

Default Image

சென்னையில் வீடு புகுந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த முருகானந்த் என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

சென்னையில் உள்ள அரும்பாக்கத்தில் வாடகை வீட்டில் 31 வயது பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவரது வீட்டின் முன்பு வாடகைக்கு முருகானந்த் என்ற 49 வயதான ஓட்டுநர் வசித்து வர அவர் தற்போது அமைந்தகரையில் குடிபெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த பெண் குடியிருக்கும் வாடகை வீட்டின் உரிமையாளரின் குடும்ப திருமணம் அதே வீட்டில் நடக்க, அதற்கு முருகானந்த்  வந்துள்ளார். அப்போது வாடகை வீட்டில் வசித்து வரும் அந்த பெண் காற்றுக்காக வீட்டு கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். அப்போது முருகானந்த் அந்த பெண்ணின் வீட்டில் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அப்பெண் முருகானந்த்க்கு எதிராக அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் செய்ய, போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்