அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து குழு அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை, அவனியாபுரத்தில் தை 1ஆம் தேதி பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்த ஜல்லிக்கட்டு விழா குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாண சுந்தரம் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
அந்த வழக்கில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. ஆனால் இந்தாண்டு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் குழு அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உள்ளனர் எனவும், கடந்தாண்டு போலவே இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து சமுதாய மக்களை ஒன்றிணைத்து ஆலோசனை குழு அமைத்து, ஆலோசனை நடத்தி அவனியாபுரம் ஜல்லி கட்டு போட்டியை நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், முத்தால் நாயக்கன்பட்டி – கீழ் ஒட்டம்பட்டி செல்லும் வழியில் உள்ள திருமுருகன் பட்டாசு…
நாமக்கல் : நேற்று அதிகாலை கேரளா மாநிலம் திருச்சூரில் 3 ஏ.டி.எம்-களில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட ஒரு கும்பல் ,…
கான்பூர் : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. மழையினால் மைதானத்தில் ஏற்பட்டிருந்த…