தாமரையும் எங்களது தான், இரட்டை இலையும் எங்களது தான் என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தேசிய கட்சியான தாமரையும் எங்களது தான், கூட்டணியில் இருக்கும் இரட்டை இலையும் எங்களது தான், மாம்பழமும் எங்களது தான் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் தேசிய கட்சி கூட்டணியில் இருக்கும் அனைத்து சின்னமும் எங்களது தான் என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக தேசிய கட்சி என்பதால் ஆங்கிலம் மற்றும் இந்திக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. தேசிய அளவில் இந்தி, ஆங்கிலம் தான் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் நாம் தமிழ் பயன்படுத்துகிறோம். ஆகையால், வரும் சட்டமன்ற தேர்தலில் தேசிய கட்சியில் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகள் பாகுபாடு இன்றி இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்த வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, பாஜகவுக்கு 20 தொகுதிகள் மற்றும் ஒரு கன்னியாகுமரி மக்களவை சீட்டு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி மக்களவையில் இடைத்தேர்தலில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…