இடைத்தேர்தலில் 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
அரவக்குறிச்சி,ஒட்டப்பிடாரம் ,திருப்பரங்குன்றம் ,சூலூர் ஆகிய 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. இந்நிலையில் வருகின்ற 19-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தற்போது 4 தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது.
அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் 63 பேர் போட்டியிடுகின்றனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் 37 பேர் போட்டியிடுகின்றனர்.
ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் 22 பேர் போட்டியிடுகின்றனர்.
4 தொகுதி இடைத்தேர்தலில் மொத்தமாக 137 பேர் போட்டியிடுகின்றனர்.