தூத்துக்குடி-தமிழிசை,சிவகங்கை-ஹெச்.ராஜா!வெளியானது பாஜகவின் பட்டியல்
- மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.
- 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை பாஜக இன்று வெளியிட்டது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.மக்களவை தேர்தல் தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.
மக்களவை தேர்தலை யொட்டி அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை கடந்த 17-ம் தேதி வெளியிட்டது.அதேபோல் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மட்டும் இதுவரை மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிடாமல் இருந்தது.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க 5 தொகுதிகள் ஒதுக்கி இருந்தனர்.தற்போது அந்த 5 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா நேற்று தெரிவித்தார்.
ஆனால் வேட்பாளர் பட்டியலை தமிழக பாஜக தலைமை வெளியிடாமல் தன்னிச்சையாக வெளியிட்டார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. இதனால் சுதாரித்துக்கொண்ட ஹெச்.ராஜா, சிறிது நேரத்திலேயே அதற்கு மறுப்பு தெரிவித்தார்.பாஜக வேட்பாளர்களை கட்சி தலைமைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டது.
- கன்னியாகுமரி-பொன்.ராதாகிருஷ்ணன்(தற்போதைய மத்திய அமைச்சர்)
- சிவகங்கை-ஹெச்.ராஜா
- ராமநாதபுரம்-நயினார் நாகேந்திரன்
- தூத்துக்குடி-தமிழிசை சௌந்தர்ராஜன் (தற்போதைய தமிழக பாஜக தலைவர்)
- கோயம்புத்தூர்-சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.