M.P venkatesan Neet [Representative Image]
மதுரையில் சுமார் ரூ.206 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை கடந்த ஜூலை 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நூலகம் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே, மதுரை கலைஞர் நூலகம் குறித்து அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை என கூறியிருந்தார்.
இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவரது பதிவில், “மதுரையில் நூலகம் வேண்டுமென்று மாணவர்களோ இளைஞர்களோ யாரும் கேட்கவில்லை”என்று திரு. உதயகுமார் சொல்கிறார். புத்தகம் கேட்கிற பிள்ளைகள் எல்லோர் வீட்டிலும் இருக்கிறார்கள். அதிமுகவினர் வீட்டில் மட்டும் இல்லையா உதயகுமார் அவர்களே! நூலகம் அறிவுக்கோயில்! அதன் மீது இவ்வளவு அலர்ஜி ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
குவாத்தமாலா : மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான குவாத்தமாலாவில் பிப்ரவரி 10 காலை உள்ளூர் பேருந்து சாலை பக்கவாட்டில் உள்ள…
மும்பை : வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும்…
கோவை : அதிமுக கட்சிக்குள் என்ன நடக்கிறது? எடப்பாடி பழனிச்சாமிக்கும் செங்கோட்டையனுக்கும் இடையே என்ன பிரச்சனை, என்று அரசியல் வட்டாரத்தில்…
சென்னை : தவெக தலைவர் விஜய்யை தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சென்னையில் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து…
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை…
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர்…