ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதி…!

Published by
லீனா

ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த நீதிபதி சதீஷ்குமார். 

ஆர்.எஸ்.பாரதி திமுக-வின் அமைப்பு செயலாளராக உள்ளார். இவர் பட்டியல் இன மக்களை அவமதித்ததாக கூறி வன்கொடுமை சட்டத்தின் கீழ் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்ததை அடுத்து, ஆர்.எஸ்.பாரதி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில்,  மனு தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த நிலையில்,ஆர்.எஸ்.பாரதி தரப்பில் வாதிடப்பட்ட போது, அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும், பட்டியல் இன மக்களை புண்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும் வாதிடப்பட்டது. ஆனால் புகார்தாரர் தரப்பில் வாதிடும்போது ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு, மக்களை பிளவுபடுத்தும் வண்ணமாகவும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும்  இருந்ததாக கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து, நீதிபதி சதீஷ்குமார் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டு, ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து உள்ளார். மேலும், ஆர்.எஸ்.பாரதி வழக்கை ரத்து செய்யுமாறு அளித்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, நீதிபதி சதீஷ்குமார் கூறுகையில், வழக்கு விசாரணையை தாமதமின்றி முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார். அறிவுபூர்வமான விவாதம் நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் எதிர் தரப்பினர் மீது விஷத்தை கக்குவது பழக்கம் ஆகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

மேகம் கருக்குது.., மழை வர பாக்குது.! வெயிலுக்கு இதமான மழை எங்கெல்லாம்?

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

21 minutes ago

கமல் – சிம்புவின் மாஸ் நடனம்.., இணையத்தை கலக்கும் ‘ஜிங்குச்சா’ பாடல்!

சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…

37 minutes ago

“தம்பி விஜய் அப்படிப்பட்ட ஆள் இல்லை.!” பாசமழை பொழியும் சீமான்!

சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…

2 hours ago

“தயவு செய்து பேச வேண்டாம்..,” அதிமுகவை தொடர்ந்து பாஜகவில் பறந்த உத்தரவு!

சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…

3 hours ago

திருவள்ளூர் மக்கள் கவனத்திற்கு.., முதலமைச்சர் வெளியிட்ட டாப் 5 அறிவிப்புகள் இதோ…

திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…

4 hours ago

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…

4 hours ago