கரூரில் 7வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை!

Income Tax department

எம்சி சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.

தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாஸ் அரசு ஒப்பதாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது.  இந்த நிலையில், கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன்படி, கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

எம்சி சங்கர் ஆனந்துக்கு சொந்தமான “சங்கர் ஃபார்ம்ஸ்” பண்ணை வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாகனங்களில் வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்