திடீரென தேதி மாற்றப்பட்ட கலைஞர் கோட்டம் திறப்பு விழா.! காரணம் இதுதானா.?

Published by
மணிகண்டன்

திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள்ள கலைஞர் கோட்டம் திறப்பு விழாவானது ஜூன் 3இல் இருந்து ஜூன் 15க்கு மாற்றப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவாக அவரது சொந்த ஊரான திருவாரூரில், கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டமானது 7000 ஏக்கரில் 12 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் இறுதி கட்ட பணிகள் முடிந்து கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3இல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அன்று மாலை தேசிய அரசியல் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தற்போது அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது மழை அதிகளவில் பெய்ததால், பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மழைநீரால் சேதமடைந்து உள்ளதால் அதனை சரிப்படுத்தி மேடை அமைக்க காலதாமதம் ஆகும் என்பதால் திறப்பு விழாவானது ஜூன் 3இல் இருந்து ஜூன் 15க்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் கோட்டம் திறப்பு விழாவுக்கு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஸ் குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் வரவுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Published by
மணிகண்டன்

Recent Posts

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

36 seconds ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

34 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

46 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago