மனைவியை கடிக்க வந்த நாயை கொடூரமாக கொன்ற கணவர்.!

Default Image

சென்னை மாவட்டத்தில் தனது மனைவியை கடிக்க வந்த நாயை ஆத்திரத்தில் அடித்து கொன்று சாக்குப்பையில்  கட்டி குப்பை தொட்டியில்  வீசிய கணவர்

சென்னையில் வசித்து வந்தவர் துரைராஜ் இவர் சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலையத்தின் அருகில் மளிகை கடை ஒன்றை நடத்திவருகிறார் இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு இவர் தெருவில் சுற்றித் திரிந்த நாய் ஒன்றை அடித்து கொன்று சாக்குப்பையில்  கட்டி அங்குள்ள குப்பை தொட்டி ஒன்றில் வீசியுள்ளார்.

மேலும் அவர் நாயை கொன்றது, ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு ஒருவர் புகார் அளித்துள்ளார், இந்நிலையில் புகாரின் பேரில் ப்ளூ கிராஸ் மேலாளர் வேலு என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் இதனையடுத்து பீர்க்கன்காரணை போலீசார் விலங்குகள் துன்புறுத்தும் சட்டத்தின் மீது 1990 கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

அவரை காவல்துறைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது ஏதற்காக நாயை அடித்து கொன்றாய் என்று காவல்துறையினர் கேட்டனர் அதற்கு துரைராஜ் எனது மனைவியை அந்த நாய் கடிக்க வந்ததால் நான் ஆத்திரத்தில் அடித்துக் கொன்றேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் நாய் கொன்று வீசிய இடத்தைத் போலீசார் துரைராஜிடம் கேட்டனர் பின் இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் கைது செய்யப்பட்ட துரைராஜிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்