#Breaking:”செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க உத்தர விட முடியாது” – உயர்நீதிமன்றம்..!

Published by
Edison

செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் ஆலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்க உத்தர விட முடியாது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும்,மக்களைக் காக்கவும் ஒரே வழி தடுப்பூசிதான் என்கிற அடிப்படையில் தடுப்பூசி போடும் இயக்கத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன.

மேலும்,இந்தியாவில் தடுப்பூசியை இரண்டு நிறுவனங்கள் மட்டுமே தயாரிப்பதால் மாநிலங்களுக்கு தடுப்பூசி உரிய அளவீட்டில் கிடைக்கவில்லை.

இதனால்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல் பயோடெக் தடுப்பூசி ஆலையைப் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வெர்ணிக்கா மேரி என்பவர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.

இதனையடுத்து,இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கூறுகையில்,”தடுப்பூசி தயாரிப்பு குறித்து மத்திய மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,இடையூறு ஏற்படுத்தும் விதமாக நீதிமன்றம் அதில் தலையிட முடியாது.

மேலும்,தடுப்பூசி உற்பத்திக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அரசுகள் முடிவெடுக்கும்.எனவே,செங்கல்பட்டு ஆலையில் தடுப்பூசி தயாரிக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது”,என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Published by
Edison

Recent Posts

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

சாம்பியன்ஸ் டிராபி 2025: இந்தியா த்ரில் வெற்றி!!! ஏமாந்து போன ஆஸ்திரேலியா….

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…

2 hours ago

அதிமுக – தேமுதிக கூட்டணியில் விரிசல்? சில மணி நேரத்தில் காணாமல் போன.. விஜயகாந்த் எக்ஸ் தள பதிவு!

சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…

4 hours ago

14.8 கிலோ தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கன்னட நடிகை ரன்யா ராவ் கைது!.

பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…

5 hours ago

INDvsAUS : கடைசி நேரத்தில் தொடர்ச்சி விக்கெட்..திணறிய ஆஸ்..இந்தியாவுக்கு வைத்த இலக்கு!

துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று  துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…

6 hours ago

ஹெட் விக்கெட்டை எடுக்க முடியுமா? சவால் விட்ட ஸ்மித்…பதிலடி கொடுத்த இந்தியா!

துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…

7 hours ago

குட் பேட் அக்லி பார்த்து ஓடியதா இட்லி கடை? ரிலீஸ் தேதிக்கு வந்த திடீர் சிக்கல்!

சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…

8 hours ago