கலப்பு திருமண சான்றிதழ் விவகாரம்.! பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

Default Image

கலப்பு திருமண சான்றிதழை சமர்பிக்கவில்லை என்பதற்காக பணி நியமன ஆணையை வழங்க தாமதிக்க கூடாது என ஓர் வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பள்ளிக்கல்வித்துறைக்கு ஓர் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளங்கோ என்பவர் தனக்கு பணி நியாமன ஆணை இன்னும் வழங்கப்படவில்லை என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அவர் கலப்பு திருமணம் செய்து இருந்துள்ளார் . அதன் சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என கூறி அவருக்கான பணி நியமனம் தாமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து தான் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், கலப்பு திருமண சான்றிதழை சமர்ப்பிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி பணி நியமனத்தை தாமதிக்க கூடாது. இன்னும் 4 வாரகாலத்திற்குள் பணி நியமன ஆணையை இளங்கோவிற்கு வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்