ஜெயலலிதா வாழ்க்கை குறித்த தலைவி படம் சிறப்பாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், இப்படம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில் தலைவி படத்தைப் பொருத்தவரை சிறப்பாக உள்ளது. இருப்பினும் இப்படத்தில் சில காட்சிகள் மற்றும் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ஜெயலலிதாவின் துணிவு அறிவு விவேகம் போன்ற பன்முக தன்மை காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் அதிமுக ஆட்சியில், திமுக கொடுத்த தொல்லைகள், அராஜகங்கள் காட்டப்படவில்லை என்றும் எம்ஜிஆர் கலைஞர் கருணாநிதி இடம் அமைச்சர் பதவி கேட்பது போல உள்ள காட்சி நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவர் எம்.ஜி.ஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பு ஏற்க முடியாது, அதனை நீக்க வேண்டும் என்றும், சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் படத்தில் அந்த காட்சிகள் சரியாக வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…