ஜெயலலிதா வாழ்க்கை குறித்த தலைவி படம் சிறப்பாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தலைவி. இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் மற்றும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி உள்ள நிலையில், இப்படம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் பேசுகையில் தலைவி படத்தைப் பொருத்தவரை சிறப்பாக உள்ளது. இருப்பினும் இப்படத்தில் சில காட்சிகள் மற்றும் நீக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், ஜெயலலிதாவின் துணிவு அறிவு விவேகம் போன்ற பன்முக தன்மை காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில் அதிமுக ஆட்சியில், திமுக கொடுத்த தொல்லைகள், அராஜகங்கள் காட்டப்படவில்லை என்றும் எம்ஜிஆர் கலைஞர் கருணாநிதி இடம் அமைச்சர் பதவி கேட்பது போல உள்ள காட்சி நீக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தலைவர் எம்.ஜி.ஆரை மதிக்காமல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா செயல்பட்டார் என்பது போன்ற சித்தரிப்பு ஏற்க முடியாது, அதனை நீக்க வேண்டும் என்றும், சசிகலாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் வீட்டு வேலைகளை கவனிக்க வந்தவர் படத்தில் அந்த காட்சிகள் சரியாக வந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…
மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…
மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…
மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…
சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…