12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்!லஞ்சம் வாங்குமாறு மிரட்டிய காவல் அதிகாரி!

Default Image

சேலம் மாவட்டத்தில் கோயம்புத்தூர்,சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒரு அரசு பள்ளி உள்ளது.அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பாலாஜி ஆவார்.இவர் வேதியியல் பிரிவு ஆசிரியர் என்பதால் மாணவிகளை ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்று பாடம் நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவியை இவர் பாலத்காரம் செய்ததாகவும் பின்பு தொடர்ந்து பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அந்த மாணவி தம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.அதன் பின்பு ஆசிரியர் மீதான புகாரை வாபஸ் வாங்கினால் 5 லட்சம் வாங்கித்தருவதாகவும் அதற்கு கருவை கலைக்க வேண்டும் எனவும் பெண் ஆய்வாளர் புஷ்பராணி தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் காரணமாக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆடரின் பேரில் பள்ளிக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.அப்போது தலைமை ஆசிரியர் அங்கிருந்து தப்பியுள்ளார்.

இந்நிலையில் காவல்துறையினர் ஆசிரியரை வலை வீசி தேடிவருகின்றன.தலைமை ஆசிரியரே மாணவியை பலாத்காரம் செய்த இந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்