எஜமானியின் உடலை யாரையும் தொடவிடாமல் காவல் காத்த நாய் !

Published by
murugan

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள வெங்களாபுரம்  பகுதியை சார்ந்த தனசேகர். இவரது மனைவி ராதா.இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனசேகர் தனது தகுதிக்கு மீறி அதிகமான கடன்களை வாங்கி உள்ளார்.

இதனால் கடனை திருப்பி கொடுக்கமுடியாமல் தவித்து வந்த தனசேகர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு தலைமறைவாகி விட்டார்.

இதனால் தனது இரண்டு குழந்தைகளை கூலி வேலை செய்து காப்பாற்றும் நிலைமை ராதாவிற்கு ஏற்பட்டது.தனது கணவர் தனசேகருக்கு கடன் கொடுத்தவர்கள் அனைவரும் ராதாவிடம் கடனை திருப்பி கேட்டு தினமும் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ராதா கணவன் இல்லாத வீடு என்பதால் தனது கஷ்டத்திலும் ஒரு நாய் ஒன்றை செல்லமாக வளர்ந்து வந்து உள்ளார்.கடன் கொடுத்தவர்கள் ராதாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.இதில் மனமுடைந்த ராதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து உள்ளார்.

இந்த  சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருப்பத்தூர் ரூரல் காவல் துறையினர் ராதாவின் உடலை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க உடலை எடுக்க முயற்சி செய்தனர். அப்போது ராதா செல்லமாக வளர்ந்து வந்த நாய் ராதாவின் உடலை எடுக்க விடாமல் ராதாவின் அருகிலே உட்காந்து கொண்டது.

தாலிகட்டி கணவன் கடனுக்காக ஓடிவிட்டார்.உறவினர்கள் யாரும் ஆறுதலுக்காக கூட கேட்க வரவில்லை. இந்நிலையில் தன் எஜமான் மீது கொண்ட பாசத்தால் அந்த நாய் ராதாவை தொடவும் , நெருக்கவிடாமலும் சுற்றி சுற்றி ராதாவை வந்தது. இதை பார்த்தவர்களின்  கண்களில் கண்ணீர் வரவைத்தது.

சிறிது நேரம் கழிந்து காவல்துறை கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராதாவின் மகள் சங்கிலியால் அந்த நாய்யை கட்டி இழுத்து சென்றார்.உடலை கைப்பற்றிய போலீசார் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர்.

தாய் , தந்தை இருவரையும் இழந்து தற்போது அனாதையாக உள்ள அந்த இரண்டு குழந்தைகளுக்கு காவலாளியாக உள்ளது அந்த நன்றி உள்ள ஜீவன்…

 

Published by
murugan
Tags: BODYdog

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

9 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

9 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

10 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

10 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

10 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

10 hours ago