புதிவண்ணாரபேட்டை காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வந்தவர் நரேஷ். இவர் புழல் பகுதியில் வசித்து வந்து உள்ளார்.இவரது மனைவி ஜெயாஸ்ரீ. கடந்த 7 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வருண் என்ற மகன் உள்ளார்.
இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை வந்ததாக கூறப்படுகிறது.சில நாள்களுக்கு முன் ஜெயாஸ்ரீ கோபித்து கொண்டு பெரம்பூரில் உள்ள தனது சகோதரர் சரவணன் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதை தொடர்ந்து சரவணன் வீட்டிற்கு அங்கு சென்ற நரேஷ் தனது மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்க்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்க்கு வந்த பிறகு நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது ஜெயாஸ்ரீ வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார்.
காவலர் நரேஷ் தூக்கில் தொங்கியபடி இறந்து உள்ளார். உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…