தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது – ஷேக் முகம்மது

Default Image

தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சேக் முஹம்மது தெரிவித்துள்ளார். 

சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் நடைபெற்ற மறைந்த லெப்டினென்ட் ஜெனரல் சப்ரோடோ மித்ராவின் புத்தக விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) ஆபத்தான அமைப்பு என்றும், மனித உரிமை அமைப்பு, மாணவர்கள் அமைப்பு என்ற முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா பயன்படுத்துகிறது என்றும் நாட்டை சீர்குலைப்பதே அந்த அமைப்பின் நோக்கம் எனவும் தெரிவித்தார்.

ஆளுநரின் இந்த பேச்சு குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் சேக் முஹம்மது அவர்கள் கூறுகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வன்மமான பேச்சால் அவதூறுகளை வாரி இறைத்துள்ளார். ஆளுநரின் பேச்சு அடிப்படை முகாந்திரம் இல்லாத தவறான கருத்து. தமிழக அரசிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் ஆளுநரின் செயல்பாடு உள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்