ஆளுநர் பாஜககாரர்.. ஆளுநர் மாளிகை பாஜக அலுவலகம்.! முதல்வர் பரபரப்பு குற்றசாட்டு.!

Published by
மணிகண்டன்

இன்று முத்துராமலிங்க தேவரின் 116வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் ராமநாதபுரம் மாட்டம் பசும்பொன்னில் உள்ள தேவரின் நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தி வருகின்றனர். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், முத்துராமலிங்க தேவரின் நினைவுகளையும், அவருக்காக திமுக செய்த பணிகளையும் பட்டியலிட்டார். அதன் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் கூறினார். அப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்ய படுவது. ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் பாட்டில் வீச்சு ஆகியவற்றை பற்றி பேசினார்.

முத்துராமலிங்க தேவர் நினைவாக திமுக செயல்படுத்திய திட்டங்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.!

மீனவர்கள் சிறைபிடிப்பு பற்றி பேசுகையில், தொடர்ந்து, இலங்கை கடற்படையால், தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய அரசு, வெளியுறவு துறை ஆகியவற்றிற்கு கடிதம் எழுதி வருகிறோம்  வெளியுறவு துறை, அண்மையில் கூட ராமநாதபுர மீனவர்கள் சிறைபிடிப்பு குறித்தும் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கடிதம் எழுதினேன்  என குறிப்பிட்டார்.

மேலும் , இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சரை நேரில் சென்று சந்திக்க திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் ராமநாதபுர மாவட்ட மீனவர் சங்க நிர்வாகிகளையும் அழைத்துக்கொண்டு டெல்லி சென்றுள்ளனர் என கூறினார்.

அடுத்து ஆரியம் திராவிடம் என்று ஒன்று இல்லை என ஆளுநர் ரவி கூறிய கருத்து பற்றிய கேள்விக்கு பதில் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்னாருக்கு இன்னார் தான். இன்னாருக்கு இதுதான் என கூறுவது ஆரியம். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என கூறுவது திராவிடம்.  இந்த உண்மையை ஆளுநர் ரவி புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் பற்றிய கேள்விக்கு, ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்படவில்லை. அதன் அருகில் தான் பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதனை காவல்துறை தெளிவாக சிசிடிவி ஆதரங்களோடு வெளிப்படுத்திவிட்டார்கள். ஆளுநர் மாளிகை திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்புகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜக கட்சியினராகவே மாறியுள்ளார். ஆளுநர் அலுவலகம் பாஜக அலுவலகமாக மாறிவிட்டது என்றும் தனது விமர்சனத்தை முன்வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

Published by
மணிகண்டன்

Recent Posts

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

16 minutes ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

53 minutes ago

“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும்…

1 hour ago

அஜித் ரசிகர்களுக்கு நாளை இரவு விருந்து… ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட்.!

சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ”குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டீஸர் நாளை இரவு…

2 hours ago

பாகிஸ்தான் – வங்கதேச போட்டி: குறுக்கே வந்த மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் - வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. குரூப் ஏ பிரிவில் இருந்து…

2 hours ago

விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு காவல்துறை இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…

3 hours ago