மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. 

அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மருத்துவப் படிப்பில் 7.5% உள் இட ஒதுக்கீட்டின் கீழ் 565 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது; அவர்களுக்கு மருத்துவ பாடத்திட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழக மக்களின் வரி பணத்தில் செயல்படும் அரசு மருத்துவமனையில், மக்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். 4 சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டுள்ளது; சாலைகளில் திடீரென விபத்து ஏற்பட்டால் மக்களுக்கு உதவ முதல் உதவி பெட்டி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்