மக்களாட்சிக்கு விரோதமாக அரசு செயல்படாது – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

Default Image

மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கை தமிழக அரசு கடைபிடிக்காது என்று எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் வேளாண் வணிகர்களிடம் கருத்து கேட்ட பின்னரே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு தமிழ்நாட்டின் வேளாண் பட்ஜெட்டை காணிக்கையாக்குகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்றவையாக மாறுவதே இந்த திட்டத்தின் நோக்கம் என்றும், மக்களாட்சிக்கு விரோதமாக தனித்து முடிவெடுத்து செயல்படுத்தும் போக்கை தமிழக அரசு கடைபிடிக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
US President Donald Trump
INDvsNZ - FINAL
INDvNZ - ICC CT 2025 Final
Rain update
Champions trophy 2025 Final prayers
Tamilnadu CM MK Stalin