பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – முன்னாள் அமைச்சர் வைகை செல்வன்

Default Image

பள்ளிகள் திறப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தீவிரமாக இருந்ததையடுத்து, இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது செப்.6-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், செப்.1-ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் அவர்கள், பள்ளிகள் திறப்பு விஷயத்தில் அரசாங்கம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும். 50% மாணவர்களை வைத்து தான் பள்ளிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அந்த 50% மாணவர்களும் கொரோனா தொற்று இல்லாத மாணவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல விதிகளை பின்பற்றி தான் நடத்த வேண்டும், இல்லையென்றால் அது மாணவர்களுக்கு ஆபத்தாக முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்