தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 10 முட்டைகளை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலானது அதிகரித்ததை தொடர்ந்து,கொரோனா பரவலை கட்டுபடுத்த தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக,மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் பாடம் பயின்று வருகின்றனர்.இதனால்,அரசு பள்ளிகளில் சத்துணவு திட்டத்தின் மூலம் பயனடைந்து வந்த 34 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்,அரசுப்பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 10 முட்டைகளையும் சேர்த்து வழங்க கடந்த ஆண்டே உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில்,தற்போதைய நடப்பு ஆண்டில் கல்வி பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் சத்துணவு திட்டத்தின் கீழ் அரிசி,பருப்பு உள்ளிட்ட உலர் பொருட்களுடன் 10 முட்டைகளையும் சேர்த்து வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…