ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார் .
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.இதனால் சாமானியர்கள் வேலைக்கு செல்ல முடியமால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அறிவித்த படி ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதிலும் கூட நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் ஏறத்தாழ பாதி பேருக்குத்தான் உணவுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக வரும் செய்திகள் ஏற்புடையதல்ல.எனவே, வருமானமின்றி துயரத்தில் இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிதியும், உணவுத்தொகுப்பும் உடனடியாக கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…