முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் -தினகரன்

Default Image

ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்று தினகரன் தெரிவித்துள்ளார் .

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது.இதனால் சாமானியர்கள் வேலைக்கு செல்ல முடியமால் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் அறிவித்த படி ஊரடங்கு நிவாரண நிதி மற்றும் உணவுத்தொகுப்பு முழுமையாக சென்றடைவதைத் தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதிலும் கூட நலவாரியத்தில் பதிவு செய்துள்ளவர்களில் ஏறத்தாழ பாதி பேருக்குத்தான் உணவுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கூறியிருப்பதாக வரும் செய்திகள் ஏற்புடையதல்ல.எனவே, வருமானமின்றி துயரத்தில் இருக்கும் அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் நிதியும், உணவுத்தொகுப்பும் உடனடியாக கிடைப்பதற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்