அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனிதாவின் பெயர் சூட்ட வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்

Default Image

அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனிதாவின் பெயர் சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. மேலும், சட்டப்பேரவை கூட்டமானது செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில்,சட்டப்பேரவையில், தனது முதல் உரையை பதிவு செய்த உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நீட் ஒழிப்பு போராளி அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக்கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்றும், நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக அரசு பதிந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்