அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது -கனிமொழி

Default Image

அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழக கோவிட் தொற்று தொடர்பான புள்ளிவிவரங்களில் தொடர்ந்து முரண்பாடுகள் வெளியாகி வருகின்றது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9500 பேர் மீண்டும் பரிசோதிக்கப்படாமல் குணமடைந்தவர்கள் எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டதாக இன்றைய செய்தி தெரிவிக்கிறது.

தமிழகத்தில்தான் கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை அதிகம் என்று அரசு சொல்வது முழுக்க பொய்யோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 236 கொரோனா இறப்பு எண்ணிக்கை கணக்கில் சேர்க்கப்படவில்லை என்று ஜூன் மாதத்தில் செய்தி வெளியாகியது. தமிழகத்தில் கொரொனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக ஒரு பிம்பத்தை கட்டமைக்க அரசு தொடர்ந்து புள்ளிவிவரங்களில் மோசடி செய்து வருகிறது. இது மிக மிக ஆபத்தான போக்கு என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று  புதிதாக 5,528 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,86,052 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live
live ilayaraja
rahul gandhi bjp
good bad ugly - gv prakash
India vs New Zealand Final
tvk poster
TVKVijay - TN govt
MKStalin - PINK AUTO