நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது – அமைச்சர் கடம்பூர் ராஜு

Default Image

நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது.

கடந்த சில மாதங்களாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மால்கள் என அனைத்துமே மூடப்பட்டுள்ளது. தற்போது, ஊரடங்கில் பல தளர்வுகள் அறுக்கப்பட்ட நிலையில், கல்வி நிறுவனங்களும், திரையரங்குகளுக்கு இன்னும் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு இதுகுறித்து  கூறுகையில்,’திரையரங்குகள் திறக்கப்படும்போது சூழலை பொறுத்து கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்றும், நடிகர்கள் சம்பள குறைப்பு விவகாரத்தில் அரசு தலையிட முடியாது, அவர்களே அதை முடிவு செய்ய வேண்டும் என்றும், தயாரிப்பாளர், இயக்குநர், விநியோகஸ்தர் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டிய விஷயம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்