தத்தெடுத்த பெற்றோர் இறந்ததால்..15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களுடன் இணைந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

Published by
Ragi

கடந்த தத்தெடுத்த பெற்றோர் உயிரிழந்ததை அடுத்து ஆதரவின்றி நின்ற துர்கா தேவி என்ற சிறுமியை 15 ஆண்டுகளுக்கு பிறகு நிஜ பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகிலுள்ள ராஜாளிபட்டியை சேர்ந்த குஞ்சன் மற்றும் பிச்சையம்மாள் தம்பதியருக்கு பிறந்த துர்காதேவி என்ற பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழ்நிலையில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவிக்கு தத்து கொடுத்துள்ளனர். இந்த நிலையில் துர்காதேவியின் வளர்ப்பு பெற்றோர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரை விராலிமலை தம்பதியரிடம் தத்தெடுத்த விவரங்களை கூறி விட்டு ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளனர்.

ஆதரவின்றி நின்ற துர்காதேவி விராமலையில் உள்ள காவல்நிலையத்தில் சென்று தனது நிஜ பெற்றோர்களை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அதனையடுத்து விராலிமலை காவல்துறை உதவி ஆய்வாளர் லலிதா பிரியதர்ஷினி மற்றும் திருவேங்கடம் ஆகியோர் சிறுமியின் நிஜ பெற்றோர்களை வரவழைத்து தத்தெடுத்த விவரங்களை கேட்டறிந்து, 15 ஆண்டுகளுக்கு பின்பு துர்காதேவியை அவரது நிஜ பெற்றோர்களான குஞ்சன் மற்றும் பிச்சையம்மாளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

வளர்ப்பு பெற்றோர்களை இழந்து ஆதரவின்றி தவித்த துர்காதேவிக்கு தற்போது தனது நிஜ பெற்றோர்கள் கிடைத்த மகிழ்ச்சியில் அவரும், 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது மகள் கிடைத்த மகிழ்ச்சியில் அவரது பெற்றோர்களும் உள்ளனர். இந்ந நெகிழ்ச்சி சம்பவத்தை அடுத்து விராலிமலை காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Published by
Ragi

Recent Posts

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

1 hour ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

2 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

3 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

3 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

4 hours ago

நெட் சும்மா பிச்சுக்க போகுது! எலான் மஸ்க் உடன் இணைந்த ஏர்டெல்!

சான் பிரான்சிஸ்கோ : ஏர்டெல் நிறுவனம், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை இந்தியாவில்…

4 hours ago