கிணற்றில் மூழ்கி இறந்த இளம்பெண்! கண்களை தானம் செய்த பெற்றோர்!

Published by
லீனா

குளிப்பதாற்காக விவசாய கிணற்றிற்கு சென்ற இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு. மக்களின் கண்களை தானம் செய்த பெற்றோர். 

செய்யாறு தாலுகா தும்பை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (52). இவருக்கு மூன்று மகள்கள் உள்ள நிலையில், இவர்கள் பெங்களூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் இளைய மகள் சுதா கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில் தனது மூத்த மகளுக்கு திருமணம் நடக்க உள்ளதால், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, இவர்களது சொந்த ஊரான தும்பை கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்று உள்ளனர்.

பெற்றோருடன் வந்த இளைய மகள் சுதா, குளிப்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். அந்த கிணற்றில் இவர் படிக்கட்டில் அமர்ந்து கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாத நிலையில், தண்ணீரில் தத்தளித்து நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

மகள் இறந்த துக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், மகளின் கண் மூலம் பார்வை இழந்தவர்களுக்கு பார்வை கொடுக்கலாமே என எண்ணி அவர்களது பெற்றோர் செய்யாறு தன்னார்வ அமைப்புக்கு தகவல் தெரிவித்தனர். பின் அவர்கள் உதவியுடன் காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையினர் சுதாவின் கண்களை தானமாக பெற்றனர். பெற்றோரின் இந்த செயல் கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, அவர்களுக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

1 hour ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

3 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

4 hours ago