அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ – ஜெயக்குமார்

Default Image

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

ஜூலை 11ம் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி,  நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு, ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான தடை நீங்கியது எனவும் தீர்ப்பு வழங்கினார். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி, இடைக்கால பொதுச்செயலாளர் என்பதை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஐ நீக்கியது செல்லும். அரசியலில் இனி ஓபிஎஸ் எதிர்காலம் ஜீரோ என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்