காடு என்பது வனவிலங்குகளுக்கு தான்; மனிதர்களுக்கு அல்ல..! உயர்நீதிமன்றம் கருத்து ..!

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே மனிதர்களே அல்ல என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து.
கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் உள்ள சுயம்பு ஆண்டவர் கோவிலில் டிசம்பர் 10 முதல் 12 வரை மகாதீபம் ஏற்ற சரவணன் என்பவர் அனுமதி கோரி மனு ஓன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் 2015 -ம் ஆண்டு முதல் வெள்ளையங்கிரி மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்ட நிலையில் தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது என கூறி இருந்தார். இந்த மனு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் , சேஷசாய் முன் அமர்விற்கு வந்தது.
இதை தொடர்ந்து நீதிபதி சத்தியநாராயணன் வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்கு மட்டுமே மனிதர்களே அல்ல என கருத்து தெரிவித்தார்.மேலும் இதுகுறித்து தமிழக அரசு , வனத்துறை ,அறநிலைத்துறை மற்றும் கோவை ஆட்சியர் ஆகியோர் நவம்பர் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவுவிட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025