சட்டவிரோத வேட்டை..! வனத்துறையினர் மீது துப்பாக்கி சூடு.! நாட்டு துப்பாக்கிகளுடன் அட்டகாசம் செய்த கும்பல்.!

Default Image

ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாடிய கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் காட்டு பகுதியில் நாட்டு துப்பாக்கிகளுடன் ஒரு கும்பல் சட்டவிரோதமாக வனவிலங்குகளை வேட்டையாடி வந்துள்ளது. இதனை அறிந்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றுள்ளானர்

இதில், அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கொண்டு வனத்துறையினரை சுட்டுள்ளனர். இதனை அடுத்து துப்பாக்கி சூடு நடத்தி வனத்துறையினர் அந்த கும்பலை பிடிக்க முயன்றனர்.

இந்த தேடுதல் வேட்டையில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 பேர் தப்பியோடிவிட்டனர். இதில் தப்பியோடிய 4 பேர் பற்றி கைது செய்யப்பட்ட ஒருவரிடம் வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்