பக்தர்களுக்கு நற்செய்தி…நாளை முதல் 5 நாட்கள் இங்கு செல்ல அனுமதி – வனத்துறை!

Default Image

பொதுவாக தமிழ் வருடப்பிறப்பில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தின் சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

இந்நிலையில்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையில் உள்ள சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. அதன்படி,நாளை முதல் ஏப்ரல் 18 ஆம் தேதி வரை 5 நாட்கள் அனுமதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால்,மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்தால் கோயிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்றும் சுந்தரமகாலிங்கம் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்