கோவையில் கொரோனா தொற்றினால் முதல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் கோவையில் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சின்னியம்பாளையத்தை சேர்ந்த 28 வயது இளைஞர் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வரும் இவர் இந்த பொது முடக்கத்தால் வீட்டில் இருந்தே பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சில நாட்களாக காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருந்ததால் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அங்கு சிகிச்சை பயன் இல்லாததால் இவர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனையில் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது ஆனால் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு இளைஞர் உயிரிழந்தார். கோவையில் இதுவரை கொரோனாவுக்கு முதியவர்கள் மட்டுமே பலியாகி உள்ள நிலையில் முதல் இளைஞர் உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…