ஆழியாறு அணையிலிருந்து பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் தண்ணீர் திறப்பு.!

Default Image

கோயம்புத்தூர் மாவட்டம், பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ஆழியாறு படுகை புதிய பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று அந்த பாசனப் பகுதிகளுக்கு இன்று முதல் உரிய இடைவெளி விட்டு 80 நாட்களுக்கு ஆழியாறு அணையிலிருந்து  மொத்தம் 2548 மி.க.அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் பழனிசாமி.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை வட்டங்களில் உள்ள 22116 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்