முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறு.! சமூக இடைவெளியை காற்றில் பறத்தி கூட்ட்டத்தால் அலைமோதிய சென்னை.!

Published by
Ragi

முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட முதல் ஞாயிறான இன்று சென்னையில் பல இடங்களில் சமூக இடைவெளியை காற்றில் பறத்தி மக்கள் கூட்டம் அலைமோதியது.

தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இபாஸ் முறை ரத்து, பேருந்து சேவைக்கு அனுமதி, வழிப்பாட்டு தலங்கள் திறக்க அனுமதி, வரும் 7ஆம் தேதி முதல் ரயில்களை இயக்க அனுமதி, ஞாயின்றன்று முழு ஊரடங்கு ரத்து உள்ளிட்ட கட்டுபாட்டுகளுடன் கூடிய பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது .

அந்த வகையில் இன்று தளர்வுகளை அறிவித்த முதல் ஞாயிறு என்பதால் காசிமேடு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலேயே மாஸ்க் அணியாமலும், தனிமனித இடைவெளியை பின்பற்றாமலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை காற்றில் பறத்தி விட்டு மீன் வாங்க மக்கள் கூட்டம் அலை மோதியது. அது மட்டுமின்றி சென்னை தீநகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் கூட்டமாக விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது. பொது மக்கள் ஊரடங்கால் பல சிக்கல்களை சந்தித்து வந்ததால் பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அவர்கள் சுய கட்டுபாடின்றி சுற்றி வருவது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் தேவைக்கு மட்டும் வெளியே சென்று பாதுகாப்பாக விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

வலுக்கும் அதிமுக மோதல்? சபாநாயகரை தனியாக சந்தித்த செங்கோட்டையன்!

சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளது…

2 minutes ago

தமிழ் படத்தை இந்தியில் ஏன் டப்பிங் செய்யுறீங்க? பரபரப்பை கிளப்பிய பவன் கல்யாண்..பிரகாஷ் ராஜ் பதிலடி!

ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும்…

42 minutes ago

TNAgriBudget2025 : வேளாண் பட்ஜெட் தாக்கல்…நேரலை அப்டேட் இதோ!

சென்னை : தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை-2025 வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து தற்போது…

1 hour ago

ஐபிஎல் 2025 அப்டேட்! யாரெல்லாம் விளையாடமாட்டாங்க தெரியுமா? பும்ரா முதல் சாம்சன் முதல்…

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி…

2 hours ago

“சீக்கிரம் வருகிறோம்”…சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ராக்கெட் புறப்பட்டது!

வாஷிங்டன் : நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து Crew-10 மிஷனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க…

4 hours ago

இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல்! விவசாயிகள் கடன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுமா?

சென்னை : நேற்று (மார்ச் 14) 2025-26 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார்.…

4 hours ago