சசிகலா செய்த முதல் தவறு…!தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தது…! திவாகரன் ஆவேசம்

Published by
Venu

சசிகலா செய்த முதல் தவறு டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தது என்று அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர்  திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
Related image
 
இது ஒருபுறம் சென்றுகொண்டிருக்க தற்போது  முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் இணைந்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
 
அந்த அறிக்கையில், அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரன் அணிக்கு சென்றவர்கள் கட்சியில் மீண்டும் இணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

 
இந்நிலையில் இது  தொடர்பாக மதுரையில் அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர்  திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பதவி பறிக்கப்பட்ட  18 பேரையும் முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் திரும்ப அழைத்திருப்பது மகிழ்ச்சியான செயல். ஆனால் யாரோ அவர்களை தடுத்து நிறுத்துகிறார்கள்.சசிகலாதான்அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரே காரணம் ஆவார். அவர் எடுத்த தவறான முடிவுகள்தான் இந்த பிரச்னைகளுக்கான காரணம்.சசிகலா செய்த முதல் தவறு டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்தது.

 
ஆனால் நான் ஒருபோதும் அதிமுகவிற்கு இடையூறாக இருந்தது கிடையாது. நானும்தான் ஒரு கட்சியை நடத்துகிறேன். எப்போதாவது அதிமுகவோடு சண்டை போடுகிறேனா? ஆனால் எப்போது பார்த்தாலும், டிடிவி தினகரன் அதிமுகவுடன் சண்டை போடுவதும், அதை கைப்பற்றுவதும்தான் அவருடைய எண்ணமாக இருக்கிறார். எங்கள் இயக்கத்தில் இருவர் இருந்தால் கூட சரி , அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை என்று  அண்ணா திராவிடர் கழக நிறுவன தலைவர்  திவாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

2 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

2 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

2 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

3 hours ago

SLVsNZ : சாதனைப் படைத்த கமிந்து! இலங்கை சுழலில் சிக்கி திணறும் நியூசிலாந்து!

காலி : நியூஸிலாந்து அணி இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றுப்பயணத் தொடரை விளையாடி வருகிறது. இந்த…

3 hours ago

“வாட்ஸ்அப் கூட யூஸ் பண்ண முடியல”…ஆர்த்தியின் கொடுமைகள்? கண்கலங்கிய ஜெயம் ரவி!!

சென்னை : ஜெயம் ரவி தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்து இருந்தார்.…

3 hours ago